Thursday, July 22, 2021

10th History -1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

I சரியான விடைையத் தேர்வு செய்யவும் 
1.   முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை? 
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர் 
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா 
இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி 
ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
 
2.  பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது? 
அ) சீனா ஆ) ஜப்பான் இ) கொரியா ஈ) மங்கோலியா 
 
3.  “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்? அ) லெனின் ஆ) மார்க்ஸ் இ) சன் யாட் சென் ஈ) மா சே துங் 
 
4.  மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது? 
அ) ஆகாயப் போர்முறை ஆ) பதுங்குக் குழிப்போர்முறை இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை ஈ) கடற்படைப் போர்முறை 
5.  பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
அ) பிரிட்டன் ஆ) பிரான்ஸ் இ) டச்சு ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 6.  பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது? 
அ) ஜெர்மனி ஆ) ரஷ்யா இ) இத்தாலி ஈ) பிரான்ஸ
 
II  கோடிட்ட இடங்களை நிரப்புக 
1. ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது. விடை:1894
 2. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது. விடை:லண்டன்
3. ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது. விடை:1902
4. பால்கனில் நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது. விடை:மாசிடோனியா
5. டானென்பர்க் போரில் பேரிழப்புகளுக்கு உள்ளானது. விடை:ரஷ்யா
6. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ஆவார். விடை:கிளமென்சோ
7. ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.விடை:1925
 
III  சரியான கூற்றைத் தேர்வுசெய்யவும் 
1. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது. 
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது. 
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.
 iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. 
அ) i), ii) ஆகியன சரி ஆ) i), iii) ஆகியன சரி இ) iv) சரி ஈ) i), ii), iv) ஆகியன சரி 
 
2. கூற்று: ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின. காரணம்: இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன. 
அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. 
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல. 
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு 
ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு. 
 
3. கூற்று: ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன. 
காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. 
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி. 
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல. 
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு. 
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு. 

IV. பொருத்துக. 
1. பிரெஸ்ட் - லிடோவஸ்க் உடன்படிக்கை - அ) வெர்செய்ல்ஸ் 
2. ஜிங்கோயிசம் -  ஆ) துருக்கி 
3. கமால் பாட்சா -  இ) ரக்ஷ்யாவும் ஜெர்மனியும் 
4. எம்டன் - ஈ) இங்கிலாந்து 
5. கண்ணாடி மாளிகை -  உ) சென்னை 
விடை: 1.இ 2.ஈ 3.ஆ 4.உ 5.அ
 
V.

சுருக்கமாக விடையளிக்கவும்.

1. சீனா - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

*சீன - ஜப்பானிய போரில் (1894 - 1895) சீனாவை சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது.
*ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்துக் கொண்டது. 
*இந்நடவடிக்கை மூலம் கிழக்கு ஆசியாவில் தானே வலிமை மிகுந்த அரசு என ஜப்பான் மெய்ப்பித்தது.

2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

* இங்கிலாந்து

* பிரான்ஸ்

* ரஷ்யா

3. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?

* இங்கிலாந்தின் - ஆரவாரமான நாட்டுப்பற்று
* பிரான்சின் - அதி தீவிரப்பற்று
* ஜெர்மனியின் - வெறிகொண்ட நாட்டுப்பற்று
 

4. பதுங்குக்குழிப் போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

* போர்வீரர்களால் தோண்டப்படும் பதுங்குக்குழிகள் எதிரிகளின் சுடுதலில் இருந்து தங்களைக் காத்துக்கொண்டு பாதுகாப்பாக நிற்க உதவின.
* பிரதானப் பதுங்குக்குழிகள் ஒன்றோடொன்றும் பின்புறமுள்ள குழிகளோடும் இணைக்கப்பட்டிருக்கும்.
* அவற்றின் வழியாக உணவு, ஆயுதங்கள், கடிதங்கள், ஆணைகள் ஆகியவை வந்து சேரும். புதிய வீரர்களும் வந்து சேர்வர்.
 
5. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?
 * துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கியப் பங்கு வகித்தார். 
* கமால் பாட்சா துருக்கியை நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்தும் மாற்றியமைத்தார்.
 

6. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

* சங்கத்திற்கென்று ரானுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை.
* பன்னாட்டுச் சங்கம் முதல் உலகப்போரில் வெற்றி பெற்ற நாடுகளின் அமைப்பாகவே காணப்பட்டது.
 

விரிவான விடையளி

1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.

ஐரோப்பிய நாடுகளின் அணிச் சேர்க்கைகளும் எதிர் அணிச் சேர்க்கைகளும்:

  • 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள் இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.

  • ஒரு முகாம் மைய நாடுகளான ஜெர்மனி ஆஸ்திரிய - ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

  • இரண்டாவது முகாம் நேசநாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ரக்ஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.

    வன்முறை சார்ந்த தேசியம்:

  • தேசப்பற்றின் வளர்ச்சியோடு ”எனது நாடு சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்ற மனப்பாங்கும் வளர்ந்தது.

  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று, பிரான்சின் அதிதீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறி கொண்ட நாட்டுப்பற்று ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக மாறியது.  

    ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு:

  • ஜெர்மன் பேரரசர் ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.

    * ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது.

     * இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது. 

    பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை:

    * பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர். 1871இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு அல்சேஸ், லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது.

    * ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டார். 

    பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு :

    * 1908ஆம் ஆண்டில் துருக்கியில் ஒரு வலுவான நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும், ரக்ஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.

    * ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும் போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரக்ஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.

    பால்கன் போர்கள்:

    * பால்கன் நாடுகள் 1912இல் துருக்கியைத் தாக்கி தோற்க்கடித்தது.

    * 1913இல் இலண்ன் உடன்படிக்கையின்படி அல்பேனியா நாடு உருவாக்கப்பட்டது.

    * மாசிடோனியாவை பிரித்துக் கொள்வதில் பல்கேரியா, செர்பியாவையும், கிரீஸ்சையும் தாக்கியது. * இரண்டாம் பால்கன் போரில் பல்கேரியா எளிதில் தோற்கடிக்கப்பட்டு புகாரேஸ்ட் உடன்படிக்கை உடன் முடிவடைந்தது. 

    உடனடிக் காரணம்:

    * 1914 ஜூன் 28 ஆம் நாள் ஆஸ்திரிய பேரரசின் இளவரசர் பிரான்ஸ் பெர்டினாண்டு செர்பியனால் படுகொலை செய்யப்பட்டார்.

    * ஆஸ்திரியா இதனை செர்பியாவை கைப்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதியது.

    * செர்பியாவிற்கு ஆதரவாக ரக்ஷ்யா படைகளைத் திரட்டுகிறது என்ற வதந்தியால் ஜெர்மனி ரக்ஷ்யா மீது போர் தொடுத்தது.

    வரைபடப் பணி. 
    உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும். 
    1. கிரேட் பிரிட்டன், 2. ஜெர்மனி, 3. பிரான்ஸ், 4. இத்தாலி, 5. மொராக்கோ, 6. துருக்கி, 7. செர்பியா, 8. பாஸ்னியா, 9. கிரீஸ், 10. ஆஸ்திரியடூமூழூ்கேரி, 11. பல்கேரியா, 12. ருமேனியா

     

     

 
 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms