Monday, September 12, 2022

இராமானுசர் – நாடகம்

இராமானுசர் – நாடகம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது ………………..
அ) பிரம்மகமலம்
ஆ) சண்ப கம்
இ) குறிஞ்சி
ஈ) முல்லை
Answer:
அ) பிரம்மகமலம்

Question 2.
தண்டு கொடிக்கு இணையானவர்கள் யாவர்?
அ) பூரணர்
ஆ) கூரேசர்
இ) முதலியாண்டான், கூரேசர்
ஈ) இராமானுசர்
Answer:
இ) முதலியாண்டான், கூரேசர்

Question 3.
தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………………..
அ) மூங்கில்
ஆ) குறிஞ்சி
இ) கமலம்
ஈ) செண்பகம்
Answer:
அ) மூங்கில்

Question 4.
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) ஆ மட்டும் சரியான கூற்று
இ) ஆ, இ இரண்டும் சரியானவை.
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.
Answer:
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.

Question 5.
பூரணரின் மகன் பெயர் ………………………..
அ) நாராயணன்
ஆ) சௌம்ய நாராயணன்
இ) சௌம்ய ராஜன்
ஈ) முதலியாண்டான்
Answer:
ஆ) சௌம்ய நாராயணன்

Question 6.
“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
அ) இராமானுசர்
ஆ) பூரணர்
இ) கூரேசர்
ஈ) முதலியாண்டான்
Answer:
அ) இராமானுசர்

Question 7.
சௌம்ய நாராயணன் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டான்?
அ) முதலியாண்டானிடம்
ஆ) பூரணரிடம்
இ) இராமானுசரிடம்
ஈ) கூரேசரிடம்
Answer:
இ) இராமானுசரிடம்

Question 8.
பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்து ………………………..
அ) திருமந்திரம்
ஆ) திருநீறு
இ) மந்திரம்
ஈ) துறவு
Answer:
அ) திருமந்திரம்

Question 9.
நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்பவர்………………………..
அ) திருமகள்
ஆ) மலைமகள்
இ) கலைமகள்
ஈ) அலைமகள்
Answer:
அ) திருமகள்

Question 10.
இளையாழ்வாரே! என்று பூரணர் யாரை அழைத்தார்?
அ) கூரேசரை
ஆ) முதலியாண்டானை
இ) இராமானுசரை
ஈ) பெரியவரை
Answer:
இ) இராமானுசரை

Question 11.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்
அ) செண்பகம்
ஆ) குறிஞ்சி
இ) முல்லை
ஈ) பிரம்மகமலம்
Answer:
ஆ) குறிஞ்சி

Question 12.
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! – இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) புறநானூறு

Question 13.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை
அ) பழனி மலை
ஆ) பிரான் மலை
இ) பொதிகை மலை
ஈ) நல்லி மலை
Answer:
ஆ) பிரான் மலை


 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms