Friday, September 9, 2022

புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி

புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி.

இந்நூலாசிரியர் ப.சிங்காரம் (1920 – 1997). இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது.

அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம்.

அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

ப.சிங்காரம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்.

வேலைக்காக இந்தோனேசியா சென்றார்.

மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார்.

இவர் அன்றைய சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.

முன்தோன்றிய மூத்தகுடி

நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை

“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி

– அகநானூறு 208 : 22

 

 

 

 

 

பலவுள் தெரிக

Question 1.
புயலிலே ஒரு தோணி என்பது
அ) சிறுகதை
ஆ) புதினம்
இ) காப்பியம்
ஈ) கவிதை
Answer:
ஆ) புதினம்

Question 2.
‘புயலிலே ஒரு தோணி’ என்னும் புதினத்தின் ஆசிரியர்
அ) ப. சிங்காரம்
ஆ) மு.வ.
இ) திரு.வி.க.
ஈ) அகிலன்
Answer:
அ) ப. சிங்காரம்

Question 3.
வடஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை தொடங்கப்பட்ட ஆண்டு
அ) 2004
ஆ) 2000
இ) 1999
ஈ) 1940
Answer:
ஆ) 2000

Question 4.
இலங்கை தந்த புயலின் பெயர்
அ) அக்னி
ஆ) ஆகாஷ்
இ) கஜா
ஈ) ஜல்
Answer:
இ) கஜா

Question 5.
‘கப்பித்தான்’ என்பது எதைக் குறிக்கிறது?
அ) தலைமை மாலுமி
ஆ) கப்பல்
இ) புயல்
ஈ) பயணி
Answer:
அ) தலைமை மாலுமி

Question 6.
‘தொங்கான்’ என்பது எதைக் குறிக்கிறது?
அ) தலைமை மாலுமி
ஆ) கப்ப ல்
இ) புயல்
ஈ) பயணி
Answer:
ஆ) கப்பல்

Question 7.
புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றிய முதல் புதினம்
அ) புயலிலே ஒரு தோணி
ஆ) தோணி வருகிறது
இ) கள்ளத் தோணி
ஈ) அகல்விளக்கு
Answer:
அ) புயலிலே ஒரு தோணி

Question 8.
தென்கிழக்காசியப் போர் மூண்டதில் மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு
அ) ஆறாம் திணை
ஆ) புயலிலே ஒரு தோணி
இ) பால் மரக்காட்டினிலே
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) புயலிலே ஒரு தோணி

Question 9.
புயலிலே ஒரு தோணி என்னும் புதினத்தின் என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அ) காவியக்கூத்து
ஆ) கலைக்கூத்து
இ) கடற்கூத்து
ஈ) இசைக்கூத்து
Answer:
இ) கடற்கூத்து

Question 10.
பா. சிங்காரத்தின் ஊர் – மாவட்டம்)
அ) சிங்கம்புணரி, சிவகங்கை
ஆ) உறையூர், திருச்சி
இ) மேட்டுப்புதூர், ஈரோடு
ஈ) தென்காசி, திருநெல்வேலி
Answer:
அ) சிங்கம்புணரி, சிவகங்கை

Question 11.
ப. சிங்காரம்
இந்தோனேசியா சென்றார்.
அ) வேலைக்காக
ஆ) தூதராக
இ) ஆய்வாளராக
ஈ) அகதியாக
Answer:
அ) வேலைக்காக

Question 12.
ப. சிங்காரம் பணியாற்றிய இதழ்
அ) தினகரன்
ஆ) தினமணி
இ) தினத்தந்தி
ஈ) தினபூமி
Answer:
இ) தினத்தந்தி

Question 13.
ப. சிங்காரத்தின் சேமிப்பான இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்.
அ) ஏழரை
ஆ) ஆறரை
இ) நான்கரை
ஈ) பத்து
Answer:
அ) ஏழரை

Question 14.
‘பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி’ என்று குறிப்பிடும் நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) கலித்தொகை
ஈ) நாலடியார்
Answer:
ஆ) அகநானூறு

Question 15.
கொல்லிமலை அமைந்துள்ள மாவட்டம்
அ) தர்மபுரி
ஆ) சேலம்
இ) நாமக்கல்
ஈ) திண்டுக்கல்
Answer:
இ) நாமக்கல்

Question 16.
புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலம் சிறப்பு வானிலை ஆய்வுமையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
அ) 62
ஆ) 64
இ) 60
ஈ) 54
Answer:
ஆ) 64

Question 17.
‘பெய்ட்டி ‘ புயலின் பெயரைத் தந்த நாடு
அ) இந்தியா
ஆ) இலங்கை
இ) ஓமன்
ஈ) தாய்லாந்து
Answer:
ஈ) தாய்லாந்து

Question 18.
புயலுக்கு இந்தியா தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்களைக் கண்டறி.
அ) அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்
ஆ) மேக், அக்னி, ஜல்
இ) மேக், சாகர், வாயு, ஆகாஷ்
ஈ) பிஜ்லி, அக்னி, மேக், கஜா
Answer:
அ) அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல்

Question 19.
வானிலை ஆய்வாளர்கள், பொதுமக்கள், கடல் மாலுமிகள் ஆகியோர்க்கு வானிலை எச்சரிக்கையைப்
புரிந்து கொண்டு செயல்படக் கொடுக்கப்படுவது
அ) புயலின் பெயர்கள்
ஆ) கலங்கரை விளக்கம்
இ) நிவாரண உதவி
ஈ) திசைகாட்டும் கருவி
Answer:
அ) புயலின் பெயர்கள்

Question 20.
நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர்.
அ) பதினெட்டாம்
ஆ) பத்தொன்பதாம்
இ) பதினாறாம்
ஈ) பதினேழாம்
Answer:
ஆ) பத்தொன்பதாம்

Question 21.
ப. சிங்காரம் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த போது இருந்த இடம்
அ) இந்தோனேசியா, மெபின் நகர்
ஆ) இலங்கை, யாழ்ப்பாணம்
இ) மலேசியா, கோலாலம்பூர்
ஈ) சீனா, பெய்ஜிங்
Answer:
அ) இந்தோனேசியா, மெபின் நகர்

Question 22.
பொருத்திக் காட்டுக.
i) கப்பித்தான் – 1. இந்தோனேசியாவிலுள்ள இடம்
ii) தொங்கான் – 2. மீன் வகை
iii) அவுலியா – 3. கப்பல்
iv) பிலவான் – 4. தலைமை மாலுமி (கேப்டன்)
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 23.
“ஓடி வாருங்கள்! இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்! என்று கத்தியவன்
அ) பாண்டியன்
ஆ) கப்பித்தான்
இ) ஜப்பானிய அதிகாரி
ஈ) குஸ்டாவ்
Answer:
ஆ) கப்பித்தான்

Question 24.
‘தமிரோ’ என்று உறுமியவர்
அ) மாலுமி
ஆ) ஜப்பானிய அதிகாரி
இ) சீன அதிகாரி
ஈ) பாண்டியன்
Answer:
ஆ) ஜப்பானிய அதிகாரி

Question 25.
வானிலை மாற்றத்தைக் கண்டு எழுந்து போய்ப் பார்த்தவன்
அ) மாலுமி
ஆ) பாண்டியன்
இ) கப்பித்தான்
ஈ) சேரன்
Answer:
ஆ) பாண்டியன்

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms