பாடம்.4 வளங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ___________________
- தங்கம்
- இரும்பு
- பெட்ரோல்
- சூரிய ஆற்றல்
விடை : சூரிய ஆற்றல்
2. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
- கமுதி
- ஆரல்வாய்மொழி
- முப்பந்தல்
- நெய்வேலி
விடை : கமுதி
3. மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று ____________
- இரும்பு
- தாமிரம்
- தங்கம்
- வெள்ளி
விடை : தாமிரம்
4. __________________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று
- சுண்ணாம்புக்கல்
- மைக்கா
- மாங்கனீசு
- வெள்ளி
விடை : மைக்கா
5. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ________________
- வெப்பசக்தி
- அணுசக்தி
- சூரிய சக்தி
- நீர் ஆற்றல்
விடை : வெப்பசக்தி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் _______________
விடை : சீனா
2. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் _______________
விடை : கஞ்சமலை
3. பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் _______________
விடை : அலுமினியம்
4. மின்சார பேட்டரிகள் தயாரிக்க _______________ பயன்படுகிறது
விடை : மாங்கனீசு
5. பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை _______________ என அழைக்கப்படுகிறது.
விடை : கருப்பு தங்கம்
III. பொருத்துக
1. புதுப்பிக்கக்கூடிய வளம் | இரும்பு |
2. உலோக வளம் | மைக்கா |
3. அலோக வளம் | காற்றாற்றல் |
4. புதை படிம எரிபொருள் | படிவுப்பாறை |
5. சுண்ணாம்புக்கல் | பெட்ரோலியம் |
விடை: 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – ஈ |
IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்
1. கூற்று : காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்
காரணம் : காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது
- கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
- கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று : இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது
காரணம் : வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்
- கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
- கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை : கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
No comments:
Post a Comment