Tuesday, June 15, 2021

வகுப்பு:11- யுகத்தின் பாடல் (i)


புத்தகத்திற்குப் பின் உள்ள வினாக்களுக்கான இடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் கூடுதல் வினாக்கள்  இங்கு உள்ளது.


  பலவுள் தெரிக

1. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க

அ) அ. முத்துராமலிங்கம்-யுகத்ஹின் பாடல்

ஆ) பவணாந்தி முனிவர்- நன்னூல்

இ) சு. இல்வரத்தினம்- ஆறாம் திணை

ஈ) இந்திரன்- பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

(i) அ,ஆ     (ii) அ, ஈ     (iii)ஆ, ஈ     (iv) அ, இ

2. “கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” – அடிமோனையைத் தெரிவு செய்க.
அ) கபாடபுரங்களை – காவுகொண்ட
ஆ) காலத்தால் – கனிமங்கள்
இ) கபாடபுரங்களை – காலத்தால்
ஈ) காலத்தால் – சாகாத
 

 3.  பாயிரம் இல்லது ...... அன்றே

அ) காவியம்     ஆ) பனுவல்     இ)பாடல்     ஈ)கவிதை

4. “ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது.” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
அ) மொழி என்பது திட, திரவ நிலைகளில் இருக்கும்.
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.
ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.

5.மொழிமுதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க

அ)அன்னம், கிண்னம் ஆ)டமாரம், இங்ஙனம் இ) ரூபாய், லட்சாதிபதி ஈ)றெக்கை, அங்ஙனம்

  குறுவினாக்கள்

 1. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
விடை:
எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

2. என் அம்மை ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே! – இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.
விடை:
தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்.

3. ‘பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?  

நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். 

4. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் -இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?  

உயிரெழுத்து (த் + உ), பன்னிரண்டு (ட் + உ); உயிர்எழுத்து (குற்றியலுகர ) ஈறு.  திருக்குறள், நாலடியார் - மெயெழுத்து ஈறு.

5. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
விடை:
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”

சிறுவினா

1. சு.வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து , தமிழ்த்தாய்க்கு எங்ஙகனம் பொருந்துகிறது? 

என் அம்மையே” எனத் தமிழ்த்தாயை அழைத்து, “வழிவழி உனது அடியைத் தொழுதவர், உழுதவர், விதைத்தவர், உழைத்து வியர்த்தவர் என அனைவர்க்கும் நிறைமணி தந்தவளே, உனக்குப் பல்லாண்டு பாடத்தான் வேண்டும்” என்று, சு. வில்வரத்தினம் பாடுகிறார்.

2. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது-?  

நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர் பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.

3.‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.  

எனக்கு உயிர் தந்தவள் தாய். தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய ஊட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளமான மொழியைக் கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழமும் புரிந்தது.  “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று, என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று, நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொருள் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன். 

4. கூற்று : குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும். 

கவிதை : கூண்டு திறந்தது சிறகடிக்கவா? இல்லை! சீட்டெடுக்க. 

கூற்றில் ‘குறியீடு’ எனக் குறிப்பிடுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது? 

 குறியீட்டுக் கவிதை என்பது அந்த வேளையில் கண்டதன் நுண்பொருளைச் சிந்திக்கத் தூண்டும் எண்ணத்தைப் பதிவு செய்வதாகும்.  பறவைகளைக் கூட்டில் அடைத்து வைத்துச் சோதிடம் பார்ப்பதை அனைவரும் அறிவர். கூட்டைத் திறப்பது பறவைக்குச் சுதந்திரம் தருவதற்காகவா? அன்று.  அது சிறகசைத்துப் பறப்பதை மறக்க அடித்து அடிமைப்படுத்தி விடுகிறார்கள்-. அதற்கென ஒரு கொத்தடிமைத் தொழிலை முடிவு செய்கிறார்கள். இந்தக் குறியீடு, சமூக அவலத்தை வெளி ப்படுத்தும்; சுருக்கமாகச் சுட்டிக்காட்ட உதவும்.

5.மொழிமுதல், மொழியிறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.  

மொழிமுதல் வரும் எழுத்துகள் : பன்னிரண்டு உயிர்எழுத்துகளும், க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் என்னும் பத்து மெய்யெழுத்துகள் உயிரெழுத்துகளோடு சேர்ந்தும் மொழிக்கு முதலில் வரும். 

 எ - கா : அன்பு (அ), ஆடு (ஆ), இலை (இ) ஈகை (ஈ) உரல் (உ), ஊசி (ஊ) எருது (எ), ஏணி (ஏ) ஐந்து (ஐ) ஒன்று (ஒ) ஓணான் (ஓ) ஔவை (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.  (க்+அ) கலம், (ங்+அ) ஙனம், (ச்+அ) சங்கு, (ஞ்+அ) ஞமலி, (த்+அ) தமிழ், (ந்+அ) நலம், (ப்+அ) பழம், (ம்+அ) மலர், (ய்+அ) யவனம், (வ்+அ) வளம் என, மெய் எழுத்துகள் பத்தும் மொழிக்கு முதலில் வரும்.  

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் : 

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொரு மெய்யெழுத்துகளும், (கு, சு, டு, து, பு, று என்னும்) குற்றியலுகரம் ஒன்றும் ஆக இருபத்து நான்கு எழுத்துகள், மொழிக்கு இறுதியில் வரும்-. 

 எ - கா : பல (அ), பலா (ஆ), கிளி (இ), தேனீ (ஈ), தரு (உ), பூ (ஊ), (எ), ஒரே (ஏ), தளை (ஐ), (ஒ), பலவோ (ஓ), கௌ (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு இறுதியில் வரும்.  உரிஞ் (ஞ்), மண் (ண்), வெரிந் (ந்), பழம் (ம்), அறன் (ன்), மெய் (ய்), அவர் ( ர் ), அவல் (ல்), அவ் (வ்), தமிழ் (ழ்), அவள் (ள்) என, மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழிக்கு இறுதியில் வரும்-.  பாக்கு (கு), பஞ்சு (சு), எட்டு (டு), பந்து (து), சால்பு (பு), கயிறு (று) எனக் குற்றியலுகர எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.

நெடுவினா

1. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எ-ழுத்துமொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க. 
 
பேச்சு மொழி என்பது, திரவநிலையில் இருந்து நம் விருப்பத்திற்குக் கையாளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிறரை உணரச் செய்யவும் துணைபுரிகிறது. எழுத்தாகப் பதிவு செய்யப்படும் மொழி, உறைந்துபோன பனிக்கட்டி போன்று, திடநிலை பெற்றுவிடுகிறது. ஆகவே, கையாள எளிதாக இருப்பதில்லை. 
 
 பேச்சுமொழிச் சிறப்பு : எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது. எழுத்து மொழியில், அதனைக் கேட்க எதிராளி என, ஒருவரும் இருப்பதில்லை. பேச்சுமொழி அப்படியன்று. எழுத்துமொழியைவிடவும் பேச்சு மொழிக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுதி. 
 
எழுத்துமொழி இயல்பு : எழுத்துமொழி என்பது, ஒருவகையில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மொழிபோல் தோன்றும்; உறைந்த பனிக்கட்டி போன்ற திடநிலை அடைந்துவிடும். எழுத்துமொழி, விருப்பம்போல் கையாள முடியாததாகி விடுகிறது. எழுத்துமொழி, நேரடிப் பயன்பாட்டிற்கு உதவாததால், வேற்றுமொழி போலாகிவிடுகிறது. 
 
பேச்சுமொழிக் கவிதை : பேச்சுமொழியே ஒரு கவிஞனை நிகழ்காலத்தவனா, இறந்தகாலத்தவனா என, நிர்ணயம் செய்யும் ஆற்றலுடையது. பேச்சுமொழியில் ஒரு கவிதையைப் படைக்கின்றபோது, அது உடம்பின் ஒரு மேல்தோல்போல் உயர்வுடன் இயங்குகிறது. ஆனால், எழுத்துமொழியில் அதே சொற்கள் அழகுடையதானாலும், உணர்ச்சி இல்லாத ஆடைபோல் போர்த்திக்கொள்ள உதவுகிறது. பேச்சுமொழியை உடனே தாகம் போக்கும் நீர் என்றும், எழுத்துமொழி உறைந்த பனிக்கட்டியானாலும், என்றேனும் ஒருநாள் பயன்தரும் எனவும் நான் உணர்கிறேன்.

2. நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

பாயிரம் : நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். பாயிரம் (i) பொதுப்பாயிரம், (ii) சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

(i) பொதுப்பாயிரம் : எல்லா நூல்களின் முகப்பிலும் பொதுவாக உரைக்கப்படுவது, பொதுப்பாயிரம் எனப்படும். நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை மாணவரின் இயல்பு, கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது, பொதுப்பாயிரம் ஆகும்.

(ii) சிறப்புப்பாயிரம் : தனிப்பட்ட சில நூல்களுக்கு மட்டும் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது, சிறப்புப்பாயிரம் எனப்படும். நூலாசிரியரின் பெயர் நூல் பின்பற்றிய வழி நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு; நூலின் பெயர்; தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு; நூலில் குறிப்பிடப்படும் கருத்து; 5நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்; இவற்றுடன் நூல் இயற்றப்பட்ட காலம்; அரங்கேற்றப்பட்ட அவைக்களம்; இயற்றப்பட்ட காரணம் ஆகியவற்றைச் சேர்த்துக் கூறுவதும் ஆகிய எல்லாச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது, சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.

 3. தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது? (அல்லது) புலம் பெயர்ந்த வலியையும் வாழ்வையும் ஆறாம் திணை வாயிலாக நீவிர் அறிவதைத் தொகுத்து எழுதுக.

அகதிகள் முகாம் வாழ்க்கை : இலங்கை, மவுண்லவினியாவில் வாடகை வீட்டில் வாழ்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, இனக் கலவரத்தின்போது வீட்டுக்காரரான சிங்களவரால் அன்று இரவு காப்பாற்றப்பட்டு, மறுநாள் அகதிகள் முகாமுக்குச் சென்றது. அங்கே யாரோ அணிந்த மேல்சட்டையை மட்டும் ஒருவர் மாற்று உடையாகப் பெற்றார். உணவுக்காகத் தட்டு ஏந்தி நின்றபோது, இப்படி ஒருகணம் தம் வாழ்வில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து, உறுதியாக இருந்துள்ளார். பலவருடம் பல தேசங்களில் சுற்றி அலைந்துள்ளார்.

புலம் பெயர்தல் காரணம் : புலம்பெயர்தல் என்பது, புதிதன்று. சங்ககாலத்தில் ஐந்நிலத்தில் வாழ்ந்த தமிழர், புலம்பெயர்ந்து வாழ்ந்ததை, இலக்கியங்களில் காணமுடிகிறது. அவர்கள் உயிர்க்காகவும், பொருள் தேடவும் புலம்பெயர்ந்தபோதும், ‘வெஞ்சின வேந்தன் பகைஅலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்பாழ்’ எனத் தனிமகனார் பாடியுள்ளார். அக்காலத்தில் அரசனின் சீற்றத்திற்கு அஞ்சிப் புலம்பெயர்ந்ததுபோலச் சமீப காலங்களில் தம்மைப் போன்றோர் புலம் பெயர நேரிட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீய சிந்தனையைச் சாக அடித்தவர்கள் : கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், சில வருடங்களில் தமிழ்ப் பத்திரிகைககள் தொடங்கி, கோரிக்கைகள் வெற்றி பெறாதநிலையில் நிரந்தர வேலையும் அடுத்தவேளை உணவும் நிச்சயமில்லா நிலையிலும், தங்கள் புதுவாழ்வைப் பதிவு செய்கின்றனர்.

புலம்பெயர்ந்தோர் சாதனை : புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழைக் கைவிடும் என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கி, கணினி யுகத்தில் தமிழ்கற்று உயர் இலக்கியங்களைப் படைத்துத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துகிறார்கள். நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை புலம் பெயர்ந்த தமிழர்கள், பத்துலட்சம் பேர் வாழ்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள். ஒருகாலத்தில் சூரியன் மறையாத பிரிட்டிஷ் ராச்சியம் என்று சொன்னதுபோல், இன்று ‘சூரியன் மறையாத தமிழ்ப்புலம்’ என்று, புலம் பெயர்ந்த தமிழர்கள் தோற்றுவித்துள்ளனர். கனடாவில் சாலை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்பெயரை மாற்றவோ, சிதைக்கவோ முடியாது. சு0புசுமுதல் ஆண்டுதோறும் ஜனவரி பு4ஆம் நாள், தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவை ஈழத் தமிழரின் புலம்பெயர்ந்த வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.

ஆறாம் திணையும் ஆறுமணிக் குருவியும் : ஆசிரியரின் ஈழத்துக் கொக்குவில் கிராமத்தில் காகமும் ஆறுமணிக் குருவியும் இருந்தன. காகம் பறக்க இரண்டு மைல் தூரமே எல்லை. ஆறுமணிக் குருவி, இமயத்தைக் கடந்தும் சென்று திரும்புமாம். ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், இந்த ஆறுமணிக் குருவிபோல, அவர்களுக்கு எல்லை கிடையாது. இனி அந்தத் தமிழர்களின் புலம், பனியும் பனிசார்ந்த நிலமும். அதுவே ஆறாம்திணை என, அ. முத்துலிங்கம் பாகுபடுத்திக் கூறியுள்ளது சிறப்பாகும்.

                                                        மொழியை ஆள்வோம்

1. தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் - இத்தொடரில் புலமைக் கதிரவன் என்பதற்கு இலக்கணக்குறிப்புத் தருக.

புலமைக் கதிரவன் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

2. மேற்கண்ட பத்தியில் இடம்பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களைக் கண்டறிக. 

புலமைக் கதிரவன் - உருவகத் தொடர். 

(பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும்) வண்டுபோல் - உவமைத்தொடர். 

3. மீனாட்சிசுந்தரனார் தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் - விடைக்கேற்ற வினாவை அமைக்க.

 மீனாட்சிசுந்தரனார் எவற்றைப் பாடுவதில் வல்லவர்?

 4. பத்தியில் மொழிமுதல் எழுத்துகளைக்கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் எனச் சுட்டுக. 

மகாவித்துவான், தலபுராணம், தேசிகர், யமகம், அந்தாதி, கலம்பகம். 

5. விளங்கினார் - பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக. 

விளங்கினார் - விளங்கு + இன் + ஆர் விளங்கு - பகுதி, இன் - இறந்தகால இடைநிலை, ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி. 

                    விடைக்கேற்ற வினா அமைக்க. 

1. மீனாட்சி சுந்தரனார், பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோலப் பாடம் கற்றார். 

மீனாட்சி சுந்தரனார் எவ்வாறு பாடம் கற்றார்? 

2. மீனாட்சி சுந்தரனார், தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர். 

மீனாட்சி சுந்தரனார் எவற்றைப் பாடுவதில் வல்லவர்?

                தமிழாக்கம் தருக

1. The Pen is mightier than the Sword.

எழுதுகோலின் முனை வாலின் முனையினை விட சிறந்தது

2. Winners don’t do different things, they do things differently.

வெற்றி பெறுவோர் வேறுவிதமான செயல்களைச் செய்வதில்லை, தாங்கள் செய்வதனை வேறுவிதமாகச் செயிறார்கள்.

3. A picture is worth a thousand words.

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமமானது.

. 4. Work while you work and play while you play.

உழைக்க வேண்டிய நேரத்தில் உழை, விளையாடும் நேரத்தில் விளையாடு.

5. Knowledge rules the world.

அறிவே உலகை ஆளுகிறது.

 

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துக: 
வாடகை - குடிக்கூலி     மாதம் - திங்கள்                         போலீஸ் - காவலர்     
நிச்சயம் - உறுதி               உத்திரவாதம் - உறுதி            சந்தோஷம் - மகிழ்ச்சி சம்பளம் - ஊதியம்         ஞாபகம் - நினைவு                     வருடம் - ஆண்டு 
தேசம் - நாடு                     வித்தியாசம் - வேறுபாடு         உற்சாகம் - பூரிப்பு 
விசா - நுழைவு                இசைவு பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு  கம்பெனி - நிறுவனம் பத்திரிகை - நாளிதழ்     கோரிக்கை - வேண்டுதல்         யுகம் - ஊழி 
ராச்சியம் - மாநிலம்,நாடு     சரித்திரம் - வரலாறு     முக்கியத்துவம் - முதன்மை சொந்தம் - உறவு             சமீபம் - அருகில்                 தருணம் - உரியவேளை 
பந்து - உறவினர்             அலங்காரம் - ஒப்பனை         இலட்சணம் - அழகு
அனுபவம் - பட்டறிவு     நட்சத்திரம் - விண்மீன்         ஜனங்கள் - மக்கள் பௌத்திரன் - பெயரன்     நமஸ்காரம் - வணக்கம்   
  கும்பாபிஷேகம் - குடமுழுக்கு             ஆசீர்வதித்தல் - வாழ்த்துதல்
 சம்பிரதாயம் - மரபு         ஜாஸ்தி - மிகுதி                 விஷயம் - செய்தி 
நாஷ்டா - சிற்றுண்டி         அங்கத்தினர் - உறுப்பினர்     அபூர்வம் - புதுமை ஆராதனை - வழிபாடு         உபயோகம் - பயன்         அபிஷேகம் - திருமுழுக்கு ஜென்ம நட்சத்திரம் - பிறந்தநாள்             சிரஞ்சீவி - திருநிறை செல்வன் 
................................................----------------

கீழ்க்காணும் நிகழ்ச்சிநிரலினைப் படித்து நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

நிகழ்ச்சி நிரல் “அரியன கேள்”

                புதியன செய்” (திங்கள் கூடுகை)

நேரம் : 2.30 பிற்பகல்

இடம் : அரசு மேல்நிலைப் பள்ளி

2.30

தமிழ்த்தாய் வாழ்த்து

2.35

வரவேற்புரை - மாணவர் இலக்கியச்செல்வன்

2.40

தலைமையுரை - திரு. எழிலன், தலைமை ஆசிரியர்

2.50

சிறப்புரை - கவிஞர் வாணி

                                           “புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை”

3.45

நன்றியுரை - மாணவர் ஏஞ்சலின்

4.00

நாட்டுப்பண்

 

அனுப்புநர் :

மாணவர் இலக்கிய மன்றத் தலைவர்,

அரசு மேல்நிலைப் பள்ளி,

சென்னை - 600 001.

 

 பெறுநர் :

முதன்மை ஆசிரியர்,

தினமணி நாளிதழ்,

சென்னை - 600 001.

 ஐயா,

எம் பள்ளியில் நடைபெற இருக்கும் திங்கள் கூடுகை நிகழ்வு குறித்த செய்தி அனுப்பியுள்ளேன். அதனை வெளியிட்டு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

உங்கள்  

வேலன்

(மாணவர் தலைவர் )

ஜூலைத் திங்கள் வார இறுதி வெள்ளிக்கிழமை அன்று, அரசு மேனிலைப் பள்ளியில் பிற்பகல் 2.30 மணிக்கு ‘அரியன கேள் புதியன செய்’ என்னும் அமைப்பின் திங்கள் கூடுகை நிகழ்வு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. மாணவர் இலக்கியச்செல்வன், 2.35 மணிக்கு வரவேற்புரை நிகழ்த்துகிறார். தலைமை ஆசிரியர் திரு. எழிலன் அவர்கள், ‘புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை’ என்னும் தலைப்பில், 2.50 மணிக்குச் சிறப்புரை நிகழ்த்துவார். 3.45 மணிக்கு மாணவர் ஏஞ்சலின் நன்றியுரை கூறிமுடித்தவுடன், 4.00 மணிக்கு நாட்டுப் பண்ணுடன் கூடுகை நிகழ்வு நிறைவு பெறும்.

        -----

 

 

No comments:

Post a Comment

Tn Election Filled Forms

Tn Election Filled Forms